பிக்பாஸ் – திருநங்கை விலகியது ஏன்?

big boss

18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, திருநங்கையான நமீதா மாரிமுத்து திடீரென விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3ஆம் திகதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

முன்னைய சீசன்களில் இல்லாத வகையில், இந்த சீசனில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

தனது வாழ்க்கையில் நிகழ்ந்த பல சோக சம்பவங்களை நமீதா சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து வந்தார்.
திடீரென போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

நமீதாவின் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவக் காரணங்களுக்காகவே அவர் விலகியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வைல்காட் ரவுண் ஊடாக போட்டிக்குள் நுழைவாரம் நமீதா. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்ககூடிய தகவல்தானே.

Exit mobile version