15 13
சினிமாபொழுதுபோக்கு

எனக்கு அதே நிலைமை, கூட யாருமே இல்லை, கதறி அழுதேன்.. சோகமான நாட்கள் குறித்து நடிகை நளினி எமோஷ்னல்

Share

எனக்கு அதே நிலைமை, கூட யாருமே இல்லை, கதறி அழுதேன்.. சோகமான நாட்கள் குறித்து நடிகை நளினி எமோஷ்னல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நளினி.

1980ம் ஆண்டு திரைக்கு வந்த ஒத்தையடி பாதையிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் சில படங்கள் நடித்தவர் அதன்பிறகு நிற்கவே நேரம் இல்லாமல் படு பிஸியாக நடித்து வந்தார், அதிகப்படியான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்தவர் இப்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடித்து வருகிறார்.

நளினி-ராமராஜன் இருவரும் திருமணம் செய்ததும் பின் விவாகரத்து பெற்றதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை நளினி கூறுகையில், விவாகரத்திற்கு பிறகு என்னுடைய குழந்தைகளை பாதுகாக்க மிகவும் கஷ்டமாக இருந்தது.

அந்த நேரத்தில் கஷ்டத்தை கூற கூட யாரும் இல்லை, இனி சினிமாவே வேண்டாம் என நான் விலகியிருந்தேன்.

ஆனால் குழந்தைகளுக்காக நான் மீண்டும் நடிக்க வந்தேன், திரும்பவும் ஏன் இதே சூழலை எனக்கு கொடுத்தாய் என தினமும் நான் வணங்கும் கருமாரி அம்மனிடம் முறையிட்டு அழுதிருக்கிறேன்.

இப்போது இந்த நிலையில் இருப்பதற்கும் அந்த கருமாரி அம்மன் தான் காரணம் என்று பல நிகழ்ச்சிகளில் அவர் கூறியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...