Capture 3
சினிமாபொழுதுபோக்கு

இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருக்க வேண்டிய படம்! மேடையில் உண்மையை போட்டு உடைத்த மணி ரத்னம்

Share

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணி ரத்னம் பட உருவாக்கம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

மேடையில் வணக்கத்தோடு தொடங்கிய மணி ரத்னம் அதில் அவர் பல விசயங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது,

என்னுடைய முதல் நன்றி கல்கிக்கு! நான் காலேஜ் படிக்கும்போது இந்தப் புத்தகத்தை படித்தேன். கிட்டதட்ட 40 வருடங்கள் ஆகின்றன. இன்னமும் இது என் மனதைவிட்டு போகவில்லை.

நான் 1980, 2000, 2010 என மூன்று முறை முயற்சி செய்துள்ளேன். எனவே எவ்வளவு பொறுப்புகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும்.

இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருக்க வேண்டிய படம். ‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு அவர் பண்ண வேண்டியது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போடப்பட்டது.

அவர் இப்படத்தை எங்களுக்காகத்தான் விட்டுவைத்தார் என்று இன்றுதான் எனக்குப் புரிந்தது. இது பலரின் கனவு, பலர் இதைப் படமாக்க முயற்சி செய்துள்ளார்கள்.

இப்போது இதை செய்து முடித்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

இதைச் செய்து முடிக்க ஏ.ஆர்.ரஹ்மான், ரவிவர்மன் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என எல்லோரும் சேர்ந்து உதவி செய்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் பாதுகாப்பு உடைகளுடன் வந்து நடித்துக் கொடுத்தார்கள்.

இப்படிப் பல்வேறு சிரமங்களுடன் இப்படத்தில் என்னுடன் வேலைசெய்த அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

#maniratnam #ponniyinsevan

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FcdOtExJNtbOyEiFVQM43
சினிமாபொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து: ‘ஜனநாயகன்’ படத்தின் 2ஆவது பாடல் 18ஆம் திகதி வெளியீடு; இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...

sandhya
சினிமாபொழுதுபோக்கு

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய காதல் சந்தியா!

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு...