tamilnaadi 92 scaled
சினிமாபொழுதுபோக்கு

32 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் இப்ப தான்.. நெகிழ்ச்சியான அனுபவத்தை கூறிய குஷ்பு..!

Share

32 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் இப்ப தான்.. நெகிழ்ச்சியான அனுபவத்தை கூறிய குஷ்பு..!

நடிகை குஷ்பு 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் அதுவும் பிரபல நடிகர் நானா படேகர் உடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். 1980 ஆம் ஆண்டு முதல் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த நிலையில் ரஜினிகாந்த், பிரபு நடித்த ’தர்மத்தின் தலைவன்’ என்ற படத்தில் 1988 ஆம் ஆண்டு தமிழில் நாயகி ஆக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்களில் நடித்த குஷ்பு, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி படங்களிலும் நடித்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு ’பிரேம் பதான்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு அவர் ஹிந்தியில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 32 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அது மட்டும் இன்றி நானா படேகர் உடன் நடிக்க இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

’ஜர்னி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அனில் சர்மா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் தேர்தல் நெருங்குவதால் பிரச்சார பணி இருக்கும் நிலையில் அதற்கு முன்பே இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று குஷ்பு திட்டமிட்டுள்ளார்.

32 ஆண்டுகளுக்கு அடுத்து மீண்டும் பாலிவுட் படத்தில் நடித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் இப்போது முற்றிலும் புத்துணர்ச்சி கொண்டவராக உணர்கிறேன் என்றும் நானா படேகருடன் நடிப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு சிறப்பு தோற்றத்தில் நடித்த ’அரண்மனை 4’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FwqhzkT2Bra4FSu7ASf7Q
பொழுதுபோக்குசினிமா

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்: கேரளாவில் விருது; கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கத் திரையிடல்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த ‘அமரன்’ திரைப்படம்,...

images 1
பொழுதுபோக்குசினிமா

மாஸ் அப்டேட்: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ (Jananayakan) திரைப்படத்தின் இசை...

RKFI scamers
சினிமாபொழுதுபோக்கு

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எச்சரிக்கை: வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் மோசடிகளை நம்ப வேண்டாம்!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில்...

images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...