24 6634ce0c48d3a
சினிமாபொழுதுபோக்கு

யாரும் என்னை கூப்பிடல.. விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா

Share

யாரும் என்னை கூப்பிடல.. விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா

நடிகை ஜோதிகா எப்போதும் சமூக கருத்துகளை மேடைகளில் பேசுபவர். கோவிலுக்கு கொடுக்கும் காசை மருத்துவமனைகளுக்கு கொடுங்கள் என ஒருமுறை பேசி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கும்.

அப்படி சமூக அக்கறையுடன் பேட்டிகளில் பேசும் ஜோதிகா சமீபத்தில் நடந்த தேர்தலில் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுந்தது. அதை நெட்டிசன்களும் விமர்சித்தனர்.

தற்போது ஜோதிகா நடித்து இருக்கும் ஸ்ரீகாந்த் என்ற படத்தின் பிரெஸ் மீட் இன்று நடந்தது. அதில் ஜோதிகாவிடம் செய்தியாளர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த ஜோதிகா, ‘நான் வருஷா வருஷம் ஓட்டு போடுகிறேன், சில நேரங்களில் வெளியூரில் இருப்பதால் வர முடியாத நிலை இருக்கும், உடல்நிலை சரியில்லாமல் போகும், எல்லா நேரமும் வீட்டில் இருக்க முடியாது.’

‘எனக்கும் பிரைவேட் லைப் இருக்கு. அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்’ என விளக்கம் கொடுத்தார்.

மேலும் அரசியலுக்கு வர எண்ணம் இருக்கா என கேட்டதற்கு, ‘யாரும் என்னை கேட்கல. இப்போது பசங்க படிச்சிட்டு இருக்காங்க, அதையும் கெரியரையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வர எண்ணம் இல்லை” என கூறி இருக்கிறார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு ‘அவுட் ஆப் தி டாபிக்’ என சொல்லி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Share
தொடர்புடையது
28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...