கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த படம் தான் புஷ்பா.
இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.
புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியை இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில் வன அதிகாரி வேடத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் அவருடைய படப்பிடிப்பு திககளில் ஏற்பட்ட சிக்கலால் படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகின்றது.
#vijaysethupathi #pushpa #cinema
Leave a comment