நடிகர் இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள இரவு நிழல் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
இப் படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக கூறி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தப்படத்தில் நடிகை பிரிகிடா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக நிர்வாணக் காட்சி ஒன்றில் பிரிகிடா நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இது குறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
இரவின் நிழல் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் புனிதமானது. அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது, அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரியவைத்தார்.
நானும், பார்த்திபன் சாரும் எனது பெற்றோரிடம் பேசியபோது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின்னர் அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சி, கிளாமராக தெரியாது.
பலரையும் அது ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த காட்சி அமைந்திருக்கும். எனது கேரக்டரில் உள்ள புனிதத்தன்மை மட்டுமே ரசிகர்களை சென்றடையும் என்று கூறியுள்ளார்.
#Brigida #IravinNizhal #cinema