8fee63c398258dd6052b4b742c98f3711659279817 original
சினிமாபொழுதுபோக்கு

இவர் தான் நம்முடைய பெரிய அடையாளம் – நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி

Share

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வெளிமாநிலங்களின் புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் திரிஷா ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது, “பல பேர் இந்த படத்தை பார்ப்பதற்காக ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வெளிமாநிலத்தவர்களும் நம் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

முதல் பான் இந்திய திரைப்படத்தை மணி சார் தான் ஆரம்பித்தார். அதனால் மணி சாரை அனைவருக்கும் தெரிகிறது.

அவர் நம்முடைய பெரிய அடையாளமாக இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானும் மணிசாரும் வரும் பொழுது தமிழ்நாட்டில் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்களோ அதுபோல் தான் வெளிமாநிலங்களிலும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

#Karthi #Ponniinselvan

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 5
சினிமாபொழுதுபோக்கு

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது என கசிந்த தகவல்

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து...

1 5
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் கரூர் Road Show பிரச்சனை, சிபிராஜ் போட்ட மாஸ் இன்ஸ்டா ஸ்டோரி.

நடிகர் விஜய், தனது திரைப்பயணத்தில் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர். இந்த இடத்தில் இருந்து விலக யாரும்...

4 4
சினிமாபொழுதுபோக்கு

இருபதுகளில் தொலைத்த இன்பம், குடும்ப நேரம்.. சமந்தா பதிவால் ரசிகர்கள் ஷாக்!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும்...

2 4
சினிமாபொழுதுபோக்கு

ஒவ்வொன்னும் தனி ரகம்ல.. BB9 உறுதியான இறுதி போட்டியாளர்கள் இவங்க தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும்...