Screenshot 7681
அழகுக் குறிப்புகள்சினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

தீபாவளி விற்பனையில் சக்கைபோடு போடும் ‘பொன்னியின் செல்வன்’ சேலை” என்ன விலை தெரியுமா?

Share

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் 500 முதல் 600 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தில் உள்ள கேரக்டருக்கு தகுந்தவாறு மிக பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்தது தான் என்றும் இதனால் மணிரத்னம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 20220913 154412

 

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர்களின் காஸ்ட்யூம்கள் மற்றும் நகைகள் மிகப் பெரிய அளவில் பெண்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது தீபாவளியை கலெக்சனாக ’பொன்னியின் செல்வன்’ சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேலையில் ’பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கேரக்டர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது என்பதும் ’பொன்னியின் செல்வன் என்ற டைட்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த சேலையை பெண்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் 2100 ரூபாய் முதல் பொன்னியின் செல்வன் புகைப்படங்கள் கொண்ட பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஜவுளிக்கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...