10 17
சினிமாசெய்திகள்

எனது திருமணத்திற்கு அப்பா வராதது ஏன்?- முதன்முறையாக ஓபனாக கூறிய யுவன் ஷங்கர் ராஜா

Share

எனது திருமணத்திற்கு அப்பா வராதது ஏன்?- முதன்முறையாக ஓபனாக கூறிய யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா.

இவரது இசையமைப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஜய் நடித்த கோட். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

படங்களுக்கு இசையமைப்பதை தாண்டி யுவன் ஷங்கர் ராஜா நிறைய இசைக் கச்சேரிகளை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது திருமணத்திற்கு அப்பா இளையராஜா வராதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கடந்த 2015ம் தேதி சாப்ரூன் நிசா என்பவருக்கு திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

அண்மையில் ஒரு பேட்டியில் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது, என் கல்யாணம் திடீர் என்று தான் நடந்தது, ஊருக்கு போய் இருந்தேன், அடுத்த நாளே கல்யாணம் என்று இருந்தது.

அப்பாகிட்ட போன் செய்து சொன்னேன், அதற்கு அவர் நான் வருவேன், அது பிரச்சனை இல்லை. ஆனால் நான் வந்தா எனக்காக என்ன பண்றதுன்னு சங்கடப்படுவாங்க, அதனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.

கல்யாணம் முடிச்சிட்டு அவரை போய் சந்தித்தோம் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...