R 5 scaled
சினிமாசெய்திகள்

கேப்டன் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார்? பின்னணியில் இருக்கும் ராசி எண்

Share

2006 -ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு சுவாரஸ்யமான பிண்ணனி உள்ளது.

நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலை காலமானார். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அவரை பற்றிய விடயங்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில், விருத்தாச்சலம் தொகுதியை விஜயகாந்த் ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற செய்தியும் பரவி வருகிறது.

கேப்டன் விஜயகாந்த் சினிமாவை தவிர அரசியலிலும் உச்சத்தை தொட்டார். 2005 -ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினாா். பின்னர், 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கினார். அப்போது, திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் தான் எனக் கூறி சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

அவருக்கு வந்த கூட்டத்தையும், ஆதரவையும் பார்த்த திராவிட கட்சிகள் வியப்பில் இருந்தன. அப்போது திமுக கூட்டணியில் பாமக இருந்தது. அந்த நேரத்தில் விஜயகாந்துக்கு பாமக கட்சியோடு மோதல்கள் இருந்தது. நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, அவர்கள் அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்க முடியாது என பாமக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது.

இதனால், பாமகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் சவால் விடுத்தார். அப்போது திமுக மீதும் தேமுதிக அதிருப்தியில் இருந்தது.

இதற்காக சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட தேர்ந்தெடுத்த தொகுதி தான் விருத்தாச்சலம். ஆனால், அங்கு பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை விட அதிக வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து, அடுத்த சட்டமன்ற தேர்தலியேயே எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தை விஜயகாந்த் பெற்றார்.

விருத்தாசலம் தொகுதியை விஜயகாந்த் தேர்ந்தெடுத்தது ஏன் என்று பார்க்கும் போது, விஜயகாந்துக்கு கடவுள் பக்தி அதிகம் உண்டு. அவருடன் இணைந்து தோ்தல் பணியாற்றியவா்கள் கூறும்போது, எண் 5 அவருக்கு ராசியாகக் கருதப்படுகிறது.

இதனால், தமிழகத்தில் 5 கோபுரங்களைக் கொண்ட கோயிலான விருத்தகிரீஸ்வரா் கோயில் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இதனால், தனது ராசிக்கான ஊராக விருத்தாச்சலத்தை விஜயகாந்த் தேர்ந்தெடுத்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...