24 666e673c89ed2
சினிமாசெய்திகள்

விஷ்ணு விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. யார் தெரியுமா, அறிவிப்பு இதோ

Share

விஷ்ணு விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. யார் தெரியுமா, அறிவிப்பு இதோ

தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இவர் மீண்டும் ராம் குமாருடன் கூட்டணி அமைந்துள்ளார். இது ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் First லுக் போஸ்டர் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தான் விஷ்ணு விஷால் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தான் தயாரிக்கவுள்ளார்.

பாடலாசிரியர், நடிகராக வலம் வந்த அருண்ராஜா காமராஜ் கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து உதயநிதியை வைத்து நெஞ்சுக்கு நீதி எனும் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...