24 663db8cfa56e3 1
சினிமாசெய்திகள்

என்னுடைய விவாகரத்து அவர்களை அதிகம் பாதித்தது.. மனம் திறந்த விஜய் யேசுதாஸ்!!

Share

என்னுடைய விவாகரத்து அவர்களை அதிகம் பாதித்தது.. மனம் திறந்த விஜய் யேசுதாஸ்!!

இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகர் தான் யேசுதாஸ். இவருடைய மகன் விஜய் யேசுதாஸ் பிரபல பாடகராகவும் நடிகராகவும் வலம் வருகிறார்.

இவர் கடந்த 2007-ம் ஆண்டு தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டு, தனியாக வாழ்ந்து வருவதாகவும் பின்னர் விவாகரத்து பெற்று விட்டதாகவும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக பேசிய விஜய் யேசுதாஸ், எங்களுடைய பிரிவு மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய குழந்தைகளுக்கு எப்போதும் சந்தோசம் கொடுக்கும் விதமாக என்னை அமைத்து கொண்டேன்.

இப்போது குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா அல்லது அவர்களுடைய அம்மாவுடன் இருக்கிறார்களா என்பதை நான் சொல்ல தேவையில்லை. அவர்களுக்கு எங்கு சந்தோசமாக இருக்கிறதோ அங்கே இருக்கிறார்கள்.

விவாகரத்தால் நான் சோகத்தில் இருக்கிறேனா என்றால் நிச்சயமாக அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை என்று விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...