IMG 20240618 WA0023
சினிமாசெய்திகள்

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

Share

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து பின் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது 50 படங்கள் நடித்து சாதித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

கடந்த ஜுன் 14ம் தேதி விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் ரிலீஸ் ஆன நாள் முதல் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது, திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி அழ வைத்துள்ளார் என பாராட்டுகிறார்கள்.

விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது மகாராஜா படத்திற்கும் அவர் அந்த சம்பளம் தான் பெற்று இருப்பார் என கூறுகின்றனர்.

ஆனால் மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், இன்னும் நான் பல படத்துக்கு அட்வான்ஸை தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துகொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பது இல்லை.

தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை என்று கூறியிருந்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...