2 11
சினிமாசெய்திகள்

மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றி.. சம்பளம் அதிகரிக்காமல் குறைத்த விஜய் சேதுபதி

Share

மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றி.. சம்பளம் அதிகரிக்காமல் குறைத்த விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா.

நித்திலன் இயக்கத்தில் உருவாகி வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சமூக அக்கறையோடு வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அசத்தினார் இயக்குனர் நித்திலன். மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள இப்படம் ஒரே வாரத்திற்குள் உலகளவில் ரூ. 58 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதியை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களுடைய அடுத்த படத்திற்காக கமிட் செய்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளாராம்.

இந்த நிலையில், இதுவரை ரூ. 15 கோடி முதல் ரூ. 17 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த விஜய் சேதுபதி, புதிதாக ஹீரோவாக கமிட்டாகியிருக்கும் இப்படத்திற்காக ரூ. 10 கோடி தான் சம்பளமாக வாங்கவுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

மகாராஜா எனும் மாபெரும் வெற்றிக்கு பின் கூட தனது சம்பளத்தை அதிகரிக்காமல், அதனை குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

 

Share
தொடர்புடையது
hindutamil prod 2025 11 23 2thuvwy1 3 4 1
பொழுதுபோக்குசினிமா

மத ரீதியான பாகுபாட்டால் வாய்ப்புகள் பறிபோகின்றன: ஏ.ஆர். ரஹ்மானின் கருத்தால் இந்தியாவில் பெரும் சர்ச்சை!

உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் திரையுலகில் நிலவும் மறைமுகமான “மத ரீதியான பாகுபாடு”...

MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...