24 665458aa4874c
சினிமாசெய்திகள்

இரண்டு திருமணம்.. ஹீரோக்கள் மேல் வந்த ஈர்ப்பு! விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை கூறிய ஷாக்கிங் தகவல்

Share

இரண்டு திருமணம்.. ஹீரோக்கள் மேல் வந்த ஈர்ப்பு! விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை கூறிய ஷாக்கிங் தகவல்

70ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெயசுதா. சமீபகாலாமாக முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகை ஜெயசுதா ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். மூன்று திருமணம் குறித்து வதந்திகள் வெளிவந்த நிலையில், அது உண்மையில்லை என மறுத்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எந்த ஹீரோவின் மீதாவது காதல் வந்ததா என்ற கேள்விக்கு ஜெயசுதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு “நான் ஹீரோயினாக இருந்த காலகட்டத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மீது எனக்கு ஒரு சிறிய ஈர்ப்பு இருந்தது. ஆனால், அது காதலா அல்லது வெறும் ஈர்ப்பு தானா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீது க்ரஷ் இருந்தது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். அவரை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தேன், அது நடக்கவில்லை”. என்றார்.

இதன்பின் அவர் கூறிய விஷயம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது என்னவென்றால் “நான் ஒரு பாடரையும் காதலித்தேன். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கனவு கண்டேன். ஆனால், சில வருடங்களுக்கு பின் தான அவர் ஓரினசேர்க்கையாளர் என தெரிந்து கொண்டேன். பிறகு நான் அதை செய்யக்கூடாது என்று உணர்ந்தேன். எனக்கு இனி எதுவும் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...