24 66471ac08e507
சினிமாசெய்திகள்

படப்பிடிப்பில் அஜித்துக்காக சாப்பாடு கொடுத்த விஜய்யின் தாய் சோபா சந்திரசேகர்.. சுவாரஸ்ய தகவல்

Share

படப்பிடிப்பில் அஜித்துக்காக சாப்பாடு கொடுத்த விஜய்யின் தாய் சோபா சந்திரசேகர்.. சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமாவில் இரு தூண்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பும், மோதலும் இருந்தாலும், இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

விஜய் – அஜித் இருவரும் இணைந்து இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் நடித்துள்ளனர். அது ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படம் ஆகும். இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இனிமேல் நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை.

இந்த நிலையில், ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து அஜித் நடித்த வந்த சமயத்தில், விஜய்க்கு மட்டுமின்றி அஜித்துக்கு சேர்த்து சாப்பாடு சமைத்து அனுப்புவாராம் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர்.

இதனை குஷி இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட அஜித், வெளிப்படையாக மேடையில் கூறினாராம். அஜித் இப்படி சொன்னவுடன் ஷோபா மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். சமீபத்தில் ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டியில், இந்த சம்பவம் குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...