Vijay 2 1706886157809 1706886228142 scaled
சினிமாசெய்திகள்

விஜய் இடத்தை பிடித்த சூர்யா.. இயக்குனருடன் பிரச்சனை, விஜய்யா இப்படி செய்தார்

Share

விஜய் இடத்தை பிடித்த சூர்யா.. இயக்குனருடன் பிரச்சனை, விஜய்யா இப்படி செய்தார்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தை முடித்தபின் தன்னுடைய 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும் அதன்பின், அரசியலில் முழு நேரம் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ப்ளாக் பஸ்டர் வெற்றியை தேடி கொடுத்த திரைப்படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம் தான். இப்படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமன் மற்றும் விஜய் இரண்டாவது முறையாக உன்னை நினைத்து படத்திற்காக இணைந்தனர்.

இருவருக்கும் இடையே பிரச்சனை
ஆம், சூர்யா நடிப்பில் வெளிவந்த உன்னை நினைத்து திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடித்து வந்தது விஜய் தான். சில காட்சிகள் கூட விஜய்யை வைத்து பாடமாக்கிவிட்டனர். ஆனால், திடீரென விஜய்க்கும் இயக்குனர் விக்ரமனுக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதனால், விஜய்க்கு பதிலாக சூர்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து உன்னை நினைத்து திரைப்படத்தை எடுத்தார் இயக்குனர் விக்ரமன். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...