1 3
சினிமாசெய்திகள்

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஏற்கனவே வாக்களித்த ஆறு கோடி மக்கள்

Share

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஏற்கனவே வாக்களித்த ஆறு கோடி மக்கள்

உலகின் வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நாளை நவம்பர் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது.இவ்வாறு நடைபெறவுள்ள இந்த தேர்தலில் முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப் பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கா்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வாக்குப் பதிவு நாளுக்கு முன்பாகவே வாக்குப் பதிவு மையங்களில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் வாக்களிக்கும் வசதி உள்ளது.

தோ்தல் நாளன்று மோசமான வானிலை, வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருத்தல், வாக்குப் பதிவு நாளன்று ஏற்படக்கூடிய எதிா்பாராத சிக்கல்கள் உள்ளிட்டவற்றை வாக்காளா்கள் எதிா்கொள்ளாமல் இருக்க இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் ஜனாதிபதி தோ்தலையொட்டி முன்கூட்டியே வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்கா முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். மொத்தம் 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கா்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ்(kamala harris), குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (donald trump)ஆகியோா் போட்டியிடுகின்றனா்

இதேவேளை இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....