1 3
சினிமாசெய்திகள்

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஏற்கனவே வாக்களித்த ஆறு கோடி மக்கள்

Share

உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஏற்கனவே வாக்களித்த ஆறு கோடி மக்கள்

உலகின் வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நாளை நவம்பர் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது.இவ்வாறு நடைபெறவுள்ள இந்த தேர்தலில் முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப் பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கா்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வாக்குப் பதிவு நாளுக்கு முன்பாகவே வாக்குப் பதிவு மையங்களில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் வாக்களிக்கும் வசதி உள்ளது.

தோ்தல் நாளன்று மோசமான வானிலை, வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருத்தல், வாக்குப் பதிவு நாளன்று ஏற்படக்கூடிய எதிா்பாராத சிக்கல்கள் உள்ளிட்டவற்றை வாக்காளா்கள் எதிா்கொள்ளாமல் இருக்க இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் ஜனாதிபதி தோ்தலையொட்டி முன்கூட்டியே வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்கா முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். மொத்தம் 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கா்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ்(kamala harris), குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (donald trump)ஆகியோா் போட்டியிடுகின்றனா்

இதேவேளை இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...