7 34
சினிமாசெய்திகள்

அஜித் பட படப்பிடிப்பில் இருந்து திடீரென கிளம்பிய த்ரிஷா.. காரணம் என்ன

Share

அஜித் பட படப்பிடிப்பில் இருந்து திடீரென கிளம்பிய த்ரிஷா.. காரணம் என்ன

நடிகை த்ரிஷா பல வருடங்களுக்கு பின் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனால், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆனால், இப்படத்தில் த்ரிஷா நடிப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென நடிகை த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளாராம்.

படப்பிடிப்பில் சண்டை ஏதாவது நடந்து, கிளம்பி வந்துவிட்டாரா என கேள்வி எழுந்த நிலையில், அதெல்லாம் ஒன்றுமில்லை நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

விரைவில் அவர் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணைந்துவிடுவார் என தகவல் தெரிவிக்கின்றனர். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
சினிமாபொழுதுபோக்கு

டுவெயின் ஜோன்சன் நடிக்கும் ‘மோனா’ (Moana) நேரடி-திரைப்பட டீஸர் வெளியீடு: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு!

பிரபல ஹொலிவூட் நடிகர் டுவெயின் ஜோன்சன் (Dwayne Johnson) நடிக்கும், டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரடி-திரைப்படமான...

23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...