தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா கிருஷ்ணன், தனது செல்லப் பிராணி ‘இஸ்ஸி கிருஷ்ணன்’ உடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்தது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. படுக்கையில் வால் ஆட்டிக் கொண்டிருக்கும் தனது செல்லப் பிராணியை வீடியோ எடுத்து, “கனவு உலகில் பூனைகளைத் துரத்துகிறது” என்ற கேப்ஷனுடன் த்ரிஷா பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவின் பின்னணியில், “உங்களுக்கு ஏற்கனவே ஒருவரையொருவர் தெரியுமா?” என்று கேட்கப்படும் கேள்விக்கு, “We used to go out” என வரும் வசனம், த்ரிஷாவின் தற்போதைய சூழலோடு தொடர்புடையதாக இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பரவி வரும் நிலையில், நடிகை த்ரிஷா குறித்து நடிகர் பார்த்திபன் அளித்த பதிலொன்றும் தற்போது வைரலாகி வருகிறது. விருது விழா ஒன்றின் போது, தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் த்ரிஷா அணிந்திருந்த உடை குறித்த புகைப்படத்தைக் காட்டி, ‘குந்தவை’ கதாபாத்திரம் குறித்து கருத்து கேட்டார். இதற்குப் பதிலளித்த பார்த்திபன், “குந்தவை சில நாட்கள் வீட்டிலேயே குந்த (அமர்ந்திருக்க) வைத்தால் நல்லது, பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்” என்று நகைச்சுவையாகவும் ரைமிங்காகவும் பதிலளித்தார்.
பார்த்திபனின் இந்த கமெண்ட், த்ரிஷாவைச் சுற்றி சமீபகாலமாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ள வதந்திகளை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர். இந்த வீடியோவை விழா மேடையில் இருந்த யாரோ ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர, அது தற்போது பெரும் வைரலாக மாறியுள்ளது. ஒருபுறம் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, மறுபுறம் பார்த்திபனின் குந்தவை பற்றிய கமெண்ட் என இரண்டும் ஒரே நேரத்தில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் மறைமுகமான செய்திகளைப் பகிர்வதும், விழா மேடைகளில் சக கலைஞர்கள் நகைச்சுவையாகவும் அதே சமயம் கூர்மையாகவும் கருத்துக்களைக் கூறுவதும் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வதந்திகள் ஓய்ந்தபாடில்லை என்பதை இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன.

