தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து அசத்திய இவர் சமீபகாலமாக இதய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.
அன்னாரின் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அவரது மகன் ஊடகங்களிற்கு பேட்டி வழங்கியுள்ளார். குறித்த பேட்டியில் அவர் தனது தந்தையின் முதல் ஆசை இது தான் என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மேலும் ” நான் ஒரு பெரிய ஹீரோவாக வேண்டும் என்றது தான் அப்பாவோட முதல் ஆசை நான் ஒரு படத்தில் நடிச்சு இருக்கன் படம் நல்லா வரும் என நினைக்கிறன். நேற்று முன் தினம் தான் அப்பா வை பாஸ் செய்து வந்தார். அவருக்கு மூச்சு திணறல் இருந்தது. வைத்தியசாலை போகலாம்னு கேட்டேன் அப்பா வர மறுத்து விட்டார் ” என மிகவும் கவலையுடன் கூறியுள்ளார்.