tamilni 73 scaled
சினிமாசெய்திகள்

ஜாக்குலின் கொடுத்த பணத்தை வேண்டாம் என மறுத்த ஜொமோட்டோ ஊழியர்.. சொன்ன காரணம் தான் அதிர்ச்சி..!

Share

ஜாக்குலின் கொடுத்த பணத்தை வேண்டாம் என மறுத்த ஜொமோட்டோ ஊழியர்.. சொன்ன காரணம் தான் அதிர்ச்சி..!

விஜய் டிவி ஜாக்குலின் தனக்கு உணவு டெலிவரி செய்ய வந்த டெலிவரி ஜொமைட்டோ ஊழியருக்கு 500 ரூபாய் பரிசாக கொடுத்த நிலையில் அந்த பணம் தனக்கு வேண்டாம் என்று கூறியதோடு அந்த நபர் அதற்கு கூறிய காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’கலக்கப்போவது யாரு’ உள்பட ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜாக்குலின் என்பதும் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில சீரியல்கள் நடித்த ஜாக்குலின் தற்போது இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவு செய்வதில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரண்டு உணவு டெலிவரி நிறுவனங்களில் ஜாக்குலின் உணவு ஆர்டர் செய்த நிலையில், யார் முதலாவதாக வந்து தனக்கு உணவு டெலிவரி செய்கிறார்களோ, அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு கொடுப்பதாக வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதில் ஜொமோட்டோ ஊழியர் முதலில் வந்து அவருடைய ஆர்டர் உணவை கொடுத்த நிலையில் அவருக்கு ஜாக்குலின் 500 ரூபாய் பரிசு கொடுத்த முன் வந்தார். அப்போது ஒரே நிமிட இடைவெளியில் ஸ்விக்கி ஊழியரும் வந்துவிட்ட நிலையில், நீங்கள் அவருக்கு அந்த பணத்தை கொடுங்கள், அவர் குடும்பஸ்தர், நான் பேச்சிலர் தான் என்று தனக்கு வர இருந்த 500 ரூபாயை ஜொமோட்டோ ஊழியர் விட்டு கொடுத்தார்.

மேலும் நான் பக்கத்தில் இருந்து தான் வந்தேன், அவர் தூரத்தில் இருந்து வந்தார் என்று கூறி அந்த பணத்தை அவருக்கு கொடுக்க சொன்னபோது தான் ஜாக்குலின் ஆச்சரியம் அடைந்தார். இதனை அடுத்து ஸ்விக்கி ஊழியருக்கு பணம் கொடுத்த வீடியோவை ஜாக்குலின் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...