17487914491
சினிமாசெய்திகள்

மல்யுத்த போட்டியா இது? Dhee-யிடம் மன்னிப்பு கேட்கிறேன்.! சின்மயியின் நெகிழ்ச்சி உரை!

Share

பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி ஸ்ரீபாதா, தமிழ் இசைத்துறையில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தை உருவாக்கியவர். தனது மென்மையான குரலால் அதிகளவான பாடல்களைப் பாடி தனது திறமையை நிரூபித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட சின்மயி, சமூகவலைத்தளங்களில் பரவி வரும் Dhee vs சின்மயி என்ற வாதத்திற்கு நேரடியாகப் பதிலளித்துள்ளார். தனது பதில்களில் குரலின் வளர்ச்சி, ஒப்பீடு, திறமைகள் ஆகியவை குறித்து உணர்ச்சி மிகுந்த கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றார்.

தனது உரையில் சின்மயி கூறியதாவது, “Dhee வெர்சன், Chinmayi வெர்சன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லை. இது சம்மந்தமே இல்லாத ஒன்று. மல்யுத்த போட்டியில் எங்களைப் போட்டியிடச் சொல்வது மாதிரி இது உள்ளது!” என்றார்.

பாடகியாக இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, அவர் மிக நேர்மையாகவும், விவேகமாகவும் கூறினார்,“கலைஞர்களாக நாங்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக பார்க்கவில்லை. ஒருவரின் திறமையைப் பார்த்து வியக்கத்தான் செய்கிறோம்.” எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போதைய இளைய பாடகி Dhee பற்றிய கருத்துக்களை சின்மயி பெரிதும் பாராட்டியிருந்தார். அதன்போது “Dhee இப்போது ஒரு சின்ன வயது பெண். அவருடைய குரலை என் குரலோடு ஒப்பிடுவது தேவையில்லாதது. இன்னும் 15 வருடங்களில், Dhee 100 சின்மயிக்களையும், 100 ஸ்ரேயாகோசல்களையும் தாண்டி செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன!” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...