tamilni 104 scaled
சினிமாசெய்திகள்

கமலுக்காக எச்.வினோத் வைத்திருந்த அரசியல் கதை.. ‘தளபதி 69’ படமாகிறதா?

Share

கமலுக்காக எச்.வினோத் வைத்திருந்த அரசியல் கதை.. ‘தளபதி 69’ படமாகிறதா?

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு செதுக்கி வைத்திருந்த அரசியல் கதையை ’தளபதி 69’ படத்திற்காக எச் வினோத் களமிறக்க இருப்பதாக சற்றுமுன் வெளியான தகவல் தெரிவிக்கின்றது.

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்பதை இன்னும் அவர் முடிவு செய்யாத நிலையில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கார்த்திக் சுப்புராஜ், அட்லி, எச்.வினோத், ஆர்ஜே பாலாஜி, திரிவிக்ரம் உள்பட சுமார் 10 இயக்குனர்கள் பெயர் ’தளபதி 69’ படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் கடைசியாக வெற்றிமாறன் பெயரும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி கமல்ஹாசனுக்காக பார்த்து பார்த்து செதுக்கி வைத்திருந்த அரசியல் கதையை சமீபத்தில் விஜய்யை சந்தித்து எச் வினோத் கூறியதாகவும் அந்த கதையை கேட்டு ஆச்சரியப்பட்ட விஜய் தனது கடைசி படமாக இருக்க இதுதான் சரியான படம் என்று முடிவு செய்து அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

’கமல் 233’ என்ற படத்திற்காக எச் வி வினோத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் கமல்ஹாசனுக்காக ஒரு சூப்பர் டூப்பர் அரசியல் கதையை தயார் செய்து இருந்த நிலையில் திடீரென அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. அந்த கதையை தான் தற்போது விஜய்க்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து உருவாக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...