திரையுலக வரலாற்றில் திறமை, தீவிரம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood). 95 வயதான இவர், தற்போது புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருப்பது சினிமா உலகையே அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.
2024ம் ஆண்டு, அவரது இயக்கத்தில் வெளியான ‘Juror 2’ திரைப்படம், அவரின் கடைசிப் படம் என சொல்லப்பட்டது. அந்தப் படம் Warner Bros. நிறுவனம் தயாரித்த, நீதிமன்ற மற்றும் சைக்கலாஜிக்கல் டிராமா கதைமாதிரியாக அமைந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து தன்னுடைய இயக்கப் பயணத்தை முடிக்க நினைத்தவர், தற்போது “ start camera action” என்று முடிவு செய்துள்ளார்.
ஹாலிவூட் தரப்பில் வெளியாகும் தகவலின்படி, க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தற்போது ஒரு புதிய திரைக்கதை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். திரைப்படத்தின் தலைப்பும், நடிகர் பட்டியலும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.