இலங்கையில் மட்டும் 2 நாட்களில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் செய்த வசூல்
சினிமாசெய்திகள்

ஜெயிலர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Share

ஜெயிலர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப் உட்படப் பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் முதல் காட்சி 9 மணிக்குத்தான் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, “இதுவரை அரசிடமிருந்து எந்த வழிகாட்டுதலும் எங்களுக்கு வரவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்” என்றார்.

இதற்கு முன் வெளியான, பொன்னியின் செல்வன் 2, மாவீரன், மாமன்னன் உட்பட சில பெரிய வரவு செலவுத் திட்டம் படங்களுக்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...