5 scaled
சினிமாசெய்திகள்

தங்கலான் படத்தின் கதை இதுதானா.. இணையத்தில் கசிந்த தகவல்

Share

தங்கலான் படத்தின் கதை இதுதானா.. இணையத்தில் கசிந்த தகவல்

பா. ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்றே வெளியாகவிருந்த இப்படம் திடீரென தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக இருந்தது. அடுத்தாக தங்கலான் பாடலுக்காக தான் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பார்வதியின் பிறந்தநாள் என்பதால், அவருக்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், தங்கலான் படத்தின் கதை இதுதான் என கூறி தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

18ஆம் நூற்றாண்டில் கேஜிஎப் பின்னணியில் ஒரு தலைவன் எப்படி உருவாகிறான். அந்த தலைவனுடைய போராட்டம் எப்படி பிரிட்டிஷ் உடன் எப்படி இருந்தது. அந்த போராட்டத்தில் அவன் எப்படி வெற்றிபெற்றான் அது எப்படி மாபெரும் சாதனையாக மாறியது என்பதே படத்தின் கதை என சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...