24 6729f86c5193c
சினிமாசெய்திகள்

33 வருடத்தை எட்டிய ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Share

33 வருடத்தை எட்டிய ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சில திரைப்படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அந்த வரிசையில் இருக்கும் படங்களில் ஒன்று ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 1991 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் கேரியரில் வெளிவந்த பெஸ்ட் படங்களில் இந்த படமும் ஒன்று.

இப்படத்தில் மம்முட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது.

மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் வரும் சூர்யா – தேவா நண்பர்கள் காட்சி 90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை பிரபலமடைந்துள்ளது.

இதே நாளில் 33 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படம் மொத்தமாக அப்போது செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 13 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...