சினிமாசெய்திகள்

விஜய் சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்.. அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா

Share
24 66445ab99dba4
Share

விஜய் சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்.. அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் சினிமாவில் இருந்து விலகவுள்ளார். தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர் யார் என்று இதுவரை தெரியவில்லை.

தெலுங்கு தயாரிப்பாளரான DVV entertainment இப்படத்தை தயாரிக்க முன் வந்தனர். ஒரு கட்டத்தில் அனைத்தும் தயாராக இருந்த நிலையில், படத்தை அறிவிப்பதற்கு முன்பே படத்தின் பிசினஸை தயாரிப்பாளர் துவங்கிவிட்டார் என கோபப்பட்டு இந்த தயாரிப்பு நிறுவனம் வேண்டாம் என விஜய் முடிவு செய்ததாக சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், தளபதி 69 படத்திலிருந்து DVV entertainment நிறுவனம் வெளியேற விஜய்யின் சம்பளம் தான் காரணம் என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

விஜய் தற்போது நடித்து வரும் Goat திரைப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்திற்காக DVV entertainment நிறுவனத்திடம் ரூ. 250 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

முதலில் சம்பளம் குறித்து விஜய்யிடம் பேசிப்பார்களாம் என தயாரிப்பாளர் எண்ணியுள்ளார். ஆனால், சம்பள விஷயத்தில் விஜய் இறங்கி வராததால் DVV entertainment இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...