24 670ca6bb3a7cf Recovered
சினிமாசெய்திகள்

நான் சினிமாவை விட்டு விலகியதற்கு காரணமே இதுதான்… ஓபனாக கூறிய நடிகை சங்கீதா

Share

நான் சினிமாவை விட்டு விலகியதற்கு காரணமே இதுதான்… ஓபனாக கூறிய நடிகை சங்கீதா

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல நடிகைகளை இப்போதும் மக்கள் மறக்காமல் உள்ளார்கள்.

அப்படி ஒரு நடிகை தான் சங்கீதா, இவர் கேரளாவை சேர்ந்தவர். 5 வயதிலேயே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

பின் தமிழ் பக்கம் வந்து முதன்முதலாக நாயகியாக எல்லாமே என் ராசா தான் என்ற படத்தில் கதாநாயகியாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

பின் சில வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஒரு கட்டத்தில் 2000ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் சங்கீதா நடித்த பூவே உனக்காக திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை செய்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் இருந்து காணாமல் போனது ஏன் என பேசியுள்ளார். அதில் அவர், கிளாமராக நடிக்கணும் என்ற கண்டிஷனுக்காகவே நான் நிறைய படங்களில் நடிக்கவில்லை.

குழந்தை குடும்பம் என்று ஆனதால் தான் என்னால் சினிமாவில் தொடர முடியவில்லை, அவர்களை பார்த்துக் கொள்வதிலேயே எனக்கு நேரம் சரியாக இருந்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் நடித்தேன், தமிழில் நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...