24 66daae67b9cce
சினிமா

காதலருடன் பிரிவா? திருமணம் குறித்து தமன்னா அளித்த பதிலால் ஏற்பட்ட பரபரப்பு

Share

காதலருடன் பிரிவா? திருமணம் குறித்து தமன்னா அளித்த பதிலால் ஏற்பட்ட பரபரப்பு

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.

இவர் தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில், தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு இருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் இணைந்து ஜோடியாக பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர்.

இதனால், இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டு இருந்த நிலையில், ஐதராபாத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமன்னா அங்கு திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு, அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...