surya44 6605706874631
சினிமாசெய்திகள்

’சூர்யா 44’ படத்தை இயக்கும் மாஸ் இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Share

’சூர்யா 44’ படத்தை இயக்கும் மாஸ் இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை மாஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கங்குவா’ படத்திற்கு பின்னர் சூர்யா, சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ என்ற படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் சூர்யா மற்றும் சுதா கொங்காரா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்றும் கூறப்பட்டது.

அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கும் நிலையில் இந்த படமும் இப்போதைக்கு தொடர்வதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக ’கர்ணா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கும் நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளன என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து விஜய்யின் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் ஏற்கனவே ரஜினிகாந்த், விக்ரம், விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களை இயக்கிய நிலையில் தற்போது அடுத்ததாக சூர்யா படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...