சூர்யா – ஜோதிகா ரீல் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க
திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதியான இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
மூத்த மகள் தியா மற்றும் இளைய மகன் தேவ் ஆவார்கள். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.
இப்படத்தில் இவர்களுடைய மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இவர் பாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இவருக்கு நல்ல பிரபலத்தை தேடி கொடுத்த திரைப்படம் என்றால் அது சில்லுனு ஒரு காதல் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா ஷர்மா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா – ஜோதிகா மகளாக நடித்த நடிகையா இது! என ஆச்சிரியதுடன் கேட்டு வருகிறார்கள்.
Comments are closed.