tamilni scaled
சினிமாசெய்திகள்

தனது ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் கேமியோ ரோலில் வந்த சூர்யா.. வெறித்தனமான ட்ரைலர்

Share

தனது ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் கேமியோ ரோலில் வந்த சூர்யா.. வெறித்தனமான ட்ரைலர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் சூரரைப் போற்று.

இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்ததால் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தது. தமிழில் நேரடியாக ஓடிடி-யில் வந்திருந்தாலும், தற்போது இந்தியில் ரீமேக் ஆகியுள்ள இப்படம் திரையரங்கங்களில் வெளிவரவுள்ளது.

ஆம், தமிழில் சூர்யா ஹீரோவாக நடித்து வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து Sarfira எனும் தலைப்பில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தையும் சுத்த கொங்கரா தான் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளிவந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அந்த காட்சியும் Sarfira ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழில் நடிகர் மோகன் பாபு நடித்திருந்த கதாபாத்திரத்தில் இந்தியில் சரத்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...