6 13
சினிமாசெய்திகள்

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்.. சபாஷ் சரியான போட்டி

Share

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்.. சபாஷ் சரியான போட்டி

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இட்லி கடை திரைப்படம் வெளிவரவிருக்கும் அதே நாளில் சூர்யா 44வது படமும் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூர்யா 44. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காத நிலையில் சூர்யாவின் 44வது என்பதால் அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் கூறுகின்றனர்.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷின் இட்லி கடை மற்றும் சூர்யாவின் 44வது படமும் வெளிவரவுள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...