Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 4
சினிமாசெய்திகள்

அஜித் சாருக்கு ரொம்ப நன்றி கடன் பட்டுள்ளேன்.. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ஓபன் டாக்

Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கார் ரேஸில் மிகவும் பிசியாக இருக்கிறார் அஜித். சமீபத்தில் கூட கார் ரேஸுக்காக மொட்டை அடித்து ஆளே மாறியிடுந்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை இயக்கவேண்டும் என்பது பல இயக்குநர்களின் கனவாக இங்கு உள்ளது. அப்படி அஜித் இயக்க மிகப்பெரிய கனவுடன் காத்துக்கொண்டிருப்பவர்தான் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். இவர் 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 3BHK. இப்படம் வருகிற ஜூலை 4ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் அஜித் உடன் இணைந்து பணிபுரிவது குறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசியுள்ளார்.

“நான் அஜித் சாருக்கு ரொம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அவரை இயக்க வேண்டும் என்றால் அதற்கான தகுதியை நான் வளர்த்து கொள்ள வேண்டும். இன்னும் சில சரியான படங்கள் எடுத்து விட்டு என்றாவது ஒருநாள் அஜித் சாருடன் படம் எடுக்க முடிந்தால் அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...