8 22
சினிமாசெய்திகள்

மொத்தமாக வீட்டை சூழ்ந்த வெள்ளம், வீட்டை காலி செய்த பிரபல நடிகர் ஸ்ரீமான்.. எங்கே சென்றார் பாருங்க

Share

மொத்தமாக வீட்டை சூழ்ந்த வெள்ளம், வீட்டை காலி செய்த பிரபல நடிகர் ஸ்ரீமான்.. எங்கே சென்றார் பாருங்க

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீமான். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள இவர் ஹீரோவின் நண்பராக, வில்லனாக என நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீமான் என்று சொன்னதும் பஞ்ச தந்திரம் படம் அனைவருக்குமே முதலில் நியாபகம் வரும். தற்போது இவர் குறித்த ஒரு விஷயம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது சென்னையில் இப்போது மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு அவஸ்தைபட்டு வருவது நாம் பார்த்து வருகிறோம்.

கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் காலணியில் வசித்து வந்துள்ளார் நடிகர் ஸ்ரீமான். இவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது, அதிக அளவில் கனமழை பெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் வரும் நிலை உள்ளது.

இதனால் அவர் முன்னெச்சரிக்கையாக அவரது வீட்டை காலி செய்துள்ளார். அங்கிருந்து அவர் தனது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு மாறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், வெள்ள மீட்பு பணிகளை அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது,

இப்பொழுது செய்யும் பணிகளை இன்னும் துரிதமாகவும் வேகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும்.

இந்த இடத்தில் இன்றும் சில கால்வாய் பணிகளை சீர் செய்தால் அது அடுத்த வருடத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....