சினிமாசெய்திகள்

மாபெரும் வெற்றிப்படத்திற்காக சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share
24 662db79e0746b
Share

மாபெரும் வெற்றிப்படத்திற்காக சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

நடிப்பின் இலக்கம் என கூறப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஹீரோவாக நடித்து வந்த சிவாஜி ஒரு கட்டத்தில் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவேண்டுமென முடிவு செய்கிறார்.

ஹீரோவாக எப்படி முத்திரை பதித்தாரோ, அதே போல் தான் ஏற்று நடித்த ஒவ்வொரு குணச்சித்திர கதாபாத்திரங்களையும் மக்கள் மனதில் பதியவைத்தார். ஆனால், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியபின், தயாரிப்பாளர்களிடம் சம்பளம் குறித்து எதுவுமே பேசமாட்டாராம் சிவாஜி.

தன்னை படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கும் தயாரிப்பாளர்களிடம், இந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தரவேண்டும் என நினைக்கிறாயோ, அதை மட்டும் கொடு போதும் என கூறிவிடுவாராம்.

அப்படி அவர் நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்திற்காக முதலில் ரூ. 100 மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார். பின் படத்தின் வியாபாரம் முடிந்த நிலையில், சிவாஜி கணேசனுக்கு ரூ. 10 லட்சம் சம்பளமாக கொடுத்தாராம் எஸ்.ஏ. சந்திரசேகர்.

இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்திற்காக, நடிகர் சிவாஜி கணேசனுக்கு ரூ. 20 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்த படம் தான் படையப்பா. இப்படத்தில் ரஜினியின் தந்தை கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். மக்கள் மனதில் இருந்து இன்று வரை நீங்கா இடத்தை இவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது.

இப்படம் வியாபாரம் முடிந்தபின், தயாரிப்பாளரிடம் இருந்து சிவாஜி கணேசனுக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. இதை தனது மகன் ராம்குமாரிடம் கொடுத்துள்ளார். காசோலையை பார்த்த ராம்குமார், அப்பா இதில் ரூ. 1 கோடி என்று போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். தயாரிப்பு தரப்பில் ஒரு பூஜ்யத்தை அதிகமாக போட்டிருப்பார்கள். ரூ. 10 லட்சம் தான் சம்பளமாக இருக்கும் என சிவாஜி கூறியுள்ளார்.

பின் தயாரிப்பாளருக்கு போன் கால் செய்து பேசிய சிவாஜி கணேசன், காசோலையில் ரூ. 1 கோடி என தவறாக சம்பளம் போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் தரப்பு, இல்ல சார் சரியாக தான் போட்டிருக்கும், ரஜினிகாந்த் சார் தான் உங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்க சொன்னார் என கூறினார்களாம்.

இந்த விஷயம் நடந்த பிறகு, ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து சிவாஜி கணேசன் கடிதம் கூட எழுதினாராம். நாம் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும், நம்முடைய மூத்த கலைஞரை எப்படி மதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...