24 663aeebc02488
சினிமாசெய்திகள்

பிரச்சனையில் சிக்கிய முத்து.. உண்மையை கண்டுபிடித்த மீனா! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கபோவது இதுதான்

Share

பிரச்சனையில் சிக்கிய முத்து.. உண்மையை கண்டுபிடித்த மீனா! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கபோவது இதுதான்

சின்னத்திரையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யில் நம்பர் 1 சீரியல் என சாதனை படைத்திருக்கும் இந்த சீரியலில் கதாநாயகன் முத்து எதிர்பாராமல் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

கதாநாயகன் முத்துவிற்கும், சிட்டி என்பவருக்கும் எப்போதுமே ஆகாது என்பதே சீரியல் பார்ப்பவர்கள் அறிவார்கள். முத்துவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த சிட்டிக்கு சரியான சந்தர்ப்பம் அமைந்தது.

அதை பயன்படுத்தி தனது சதி வலையில் முத்துவை சிக்க வைத்துள்ளார். இதனால் குடித்துவிட்டு வண்டி ஓட்டும் டேக்சி ட்ரைவர் என்ற கெட்ட பெயர் ஊர் முழுக்க முத்துவிற்கு ஏற்படுகிறது.

இதனால் முத்துவை இதுவரை நம்மிக்கொண்டிருந்த தந்தை அண்ணாமலை கூட, முத்துவை அடித்துவிட்டார். தன்னை யாரும் நம்பவில்லை என உடைந்துபோகிறார் முத்து. இந்த நிலையில், தனது கணவர் முத்து யார் இப்படி சிக்க வைத்தது என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளார் மீனா.

சிட்டி தான் முத்துவை தவறான ஆளாக ஊர் உலகத்திற்கு சித்தரித்துள்ளார் என்றும், உண்மையிலேயே தனது கணவர் எந்த ஒரு தப்பும் செய்யவில்லை என்பதையும் கண்டுபிடிக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...