24 667a4ff9d4df4
சினிமாசெய்திகள்

சென்சேஷனல் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு.. யார் தெரியுமா

Share

சென்சேஷனல் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு.. யார் தெரியுமா

நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை முடித்தபின் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள STR 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்த பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்சேஷனல் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்க போகிறாராம் சிம்பு.

ஏற்கனவே இவர்கள் இருவரும் இணையும் படம் குறித்து தகவல் கூறப்பட்ட நிலையில், திடீரென அப்படம் கைவிடப்பட்டது என்றனர். ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இப்படம் கைவிடப்படவில்லையாம்.

இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், சிம்பு தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, சுதா கொங்கராவுடன் இணைவார் என கூறப்படுகிறது. அப்படம் சிம்புவின் 50வது படமாகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...