10 23 scaled
சினிமா

மகாராஜா படத்தில் நடிக்காமல் போனதற்கு இது தான் காரணம்!! நடிகர் சாந்தனு கொடுத்த விளக்கம்..

Share

மகாராஜா படத்தில் நடிக்காமல் போனதற்கு இது தான் காரணம்!! நடிகர் சாந்தனு கொடுத்த விளக்கம்..

குரங்கு பொம்மை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் நித்திலன் சாமிநாதன்.

இதனை அடுத்து விஜய் சேதுபதியின் 50-வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட நித்திலன் சாமிநாதன், பான் இந்தியா டு பான் வேர்ல்ட் கொண்டு சென்றுவிட்டார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் நித்திலன் சாமிநாதன் மகாராஜா கதை விஜய் சேதுபதிக்கு எழுதப்பட்ட கதை இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த கதைக்கு ஹீரோவாக முதலில் சாந்தனுவை தான் தேர்வு செய்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சாந்தனு ஒரு பதிவு செய்துள்ளார். அதில், மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததிற்கு இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி எனவும், நான் முதலில் இந்த கதையை தேர்வு செய்தேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி எனவும் கூறினார்.

மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானும் காரணம் இல்லை என்றும், அப்பாவிற்கு இயக்குனர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது என்றும், தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் படம் எடுக்க தாமதம் ஆகிவிட்டது என்றும் சாந்தனு பதிவிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FwqhzkT2Bra4FSu7ASf7Q
பொழுதுபோக்குசினிமா

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்: கேரளாவில் விருது; கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கத் திரையிடல்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த ‘அமரன்’ திரைப்படம்,...

images 1
பொழுதுபோக்குசினிமா

மாஸ் அப்டேட்: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ (Jananayakan) திரைப்படத்தின் இசை...

RKFI scamers
சினிமாபொழுதுபோக்கு

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எச்சரிக்கை: வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் மோசடிகளை நம்ப வேண்டாம்!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில்...

images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...