2 9 scaled
சினிமாசெய்திகள்

சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. வெற்றிக்கு பின் எகிறிய பல லட்சங்கள்

Share

சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. வெற்றிக்கு பின் எகிறிய பல லட்சங்கள்

தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகியாக மாறியுள்ளார் மமிதா பைஜூ. மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமலு படத்தின் மூலம் இன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் இவருக்கு 22 வயது தான் ஆகிறது.

2017ல் தனது திரை பயணத்தை துவங்கிய இவருக்கு கோ-கோ, சூப்பர் சரண்யா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மலையாளத்தில் கலக்கிக்கொண்டிருந்த நடிகை மமிதா பைஜூ, இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால், சில காரணங்களால் பின் அப்படத்திலிருந்து விலகி விட்டார்.

இந்த நிலையில், இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் ஜி.வி. பிரகாஷின் ரெபெல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் மமிதா பைஜூ. இதை தொடர்ந்து ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக மமிதா பைஜூ தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ள மமிதா பைஜூ தற்போது ஒரு படத்திற்கு ரூ. 30 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ப்ரேமலு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கு ரூ. 50 லட்சம் வரை சம்பளம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...