24 667a61c048066
சினிமாசெய்திகள்

சர்தார் இரண்டாம் பாகம்.. படத்தின் கதாநாயகி யார் தெரியுமா! இவர் தானா

Share

சர்தார் இரண்டாம் பாகம்.. படத்தின் கதாநாயகி யார் தெரியுமா! இவர் தானா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தில் ராஷி கன்னா, லைலா, ராஜீஷா விஜயன், யுகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் என்பவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர். நடிகை ஆஷிகா ரங்கநாத் தமிழில் பட்டத்து அரசன் படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் தமிழில் இவர் நடிக்கவுள்ள திரைப்படம் சர்தார் 2 என கூறப்படுகிறது.

முதல் பாகத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், சர்தார் 2 படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...