24 667a61c048066
சினிமாசெய்திகள்

சர்தார் இரண்டாம் பாகம்.. படத்தின் கதாநாயகி யார் தெரியுமா! இவர் தானா

Share

சர்தார் இரண்டாம் பாகம்.. படத்தின் கதாநாயகி யார் தெரியுமா! இவர் தானா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தில் ராஷி கன்னா, லைலா, ராஜீஷா விஜயன், யுகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் என்பவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர். நடிகை ஆஷிகா ரங்கநாத் தமிழில் பட்டத்து அரசன் படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் தமிழில் இவர் நடிக்கவுள்ள திரைப்படம் சர்தார் 2 என கூறப்படுகிறது.

முதல் பாகத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், சர்தார் 2 படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...