33 3
சினிமா

எனக்கும் ஆர்யாவிற்கும் சண்டை வரும்.. வெளிப்படையாக பேசிய நடிகர் சந்தானம்

Share

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிற முடிவை எடுத்து அதிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் DD next level. வருகிற 16ம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் சந்தானம் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா மற்றும் நடிகர் சந்தானம் கலந்துகொண்டனர். அப்போது ஆர்யா குறித்து சந்தானம் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ஆர்யாவும் நானும் நண்பர்களா இருக்கும் போது சண்டை வராது. அவன் தயாரிப்பாளரா இருக்கும்போது, எங்களுக்குள்ள சில நேரங்களில் சண்டைகள் வரும். சில நேரங்களில் ஆர்யா கோபித்துக் கொள்வான். ரொம்ப சண்டை ஆயிடுச்சின்னா நான் கிளம்பி ஈஷா போயிடுவேன். உடனே எனக்கு போன் அடிச்சு சத்குரு கிட்ட காசு வாங்கி கொடு என்று கேட்பான். அவர்கிட்ட எப்படிடா காசு வாங்க முடியும் என்று கேட்டா, நீ அங்க தானே போற அவர்கிட்ட காசு வாங்கி கொடுத்துவிட்டு ப்ரொடியூசர் என்று அவர் பெயர் போட்டுக்கோ என்று சொல்வான்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...