5 5 scaled
சினிமாசெய்திகள்

லோகேஷ் கனகராஜை எச்சரித்த விஜய்யின் தந்தை.. சொல்லியும் கேட்கவில்லை, வெச்சு செய்த சம்பவம்

Share

லோகேஷ் கனகராஜை எச்சரித்த விஜய்யின் தந்தை.. சொல்லியும் கேட்கவில்லை, வெச்சு செய்த சம்பவம்

திரையுலகில் மூத்த இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு படத்தின் விழா ஒன்றில் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சி இளம் தலைமுறை இயக்குனர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

இதில் “நான் ஒரு இயக்குனருக்கு போன் கால் செய்து பேசினேன். அப்போது அவருடைய படத்தின் முதல் பாதி சூப்பராக இருக்கும் அருமையாக இருக்கு என கூறினேன். அப்போது அவர் என்னிடம் நன்றாக பேசி கொண்டு இருந்தார். இரண்டாம் பாதி சற்று தொய்வு ஆக இருக்கு அதை சரி செய்யலாமே.

நீங்கள் படத்தில் காட்டிய மதத்தில் அப்படிப்பட்ட மூடநம்பிக்கை எல்லாம் ஒன்றுமே இல்லை. தந்தையே தனது பிள்ளையை பலி கொடுப்பது போல் காட்டியுள்ளீர்கள். அப்படியெல்லாம் அந்த மதத்தில் இல்லை என கூறும் போது, சார் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என கூறிவிட்டு போன் கால் கட் செய்துவிட்டார்.

அந்த படம் வெளிவருவதற்கு 5 நாட்களுக்கு முன்பே அப்படத்தை பார்த்துவிட்டேன். அதன்பின் நான் கூறியதை வைத்து படத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், நான் சொன்னதை அந்த இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. படம் வெளிவந்த பின் அனைவரும் அப்படத்தை வெச்சு செய்தார்கள்” என பேசினார்.

எஸ்.ஏ.சி-யின் இந்த பேச்சு இயக்குனர் லோகேஷ் கனகராஜை பற்றி தான் என ரசிகர்கள் கூறி வருகிறார். ஏனென்றால் அவருடைய லியோ படத்தில் தான் தந்தை, மகளை பலி கொடுப்பது போல் காட்சி இருந்தது. மேலும் படம் வெளிவருவதற்கு 5 நாட்களுக்கு முன்பே படத்தை பார்த்துவிட்டு இரண்டாம் பாதி சரியில்லை என எஸ்.ஏ.சி கூறினாராம்.

அதே போல் லியோ படம் வெளிவந்தபின் அப்படத்திற்கு அனைவரும் கூறிய அதிகபட்ச விமர்சனம் இரண்டாம் பாதி சரியில்லை, தொய்வாக இருக்கிறார் என்பது தான். தனது மகன் படமாக இருந்தாலும் கூட எஸ்.ஏ.சி வெளிப்படையாக கூறிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...