23 6589197dc5a99
சினிமாசெய்திகள்

கலாநிதி மாறன் மகள் காவ்யாவை பார்க்கும் போது BP ஏறுது.. ரஜினி சொன்ன வார்த்தை! வெளுத்து வாங்கிய சம்பவம்

Share

கலாநிதி மாறன் மகள் காவ்யாவை பார்க்கும் போது BP ஏறுது.. ரஜினி சொன்ன வார்த்தை! வெளுத்து வாங்கிய சம்பவம்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார்.

அதில் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா குறித்தும் பேசினார். IPL போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆவர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போதெல்லாம் இவருடைய எக்ஸ்பிரஷன்ஸ் தான் இணையத்தில் வைரலாகும்.

இதுகுறித்து ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நல்ல வீரர்களை போடுங்க. போட்டி நடக்கும்போதெல்லாம் காவ்யாவின் எக்ஸ்பிரஷன்ஸ் பார்த்தா நமக்கே டென்ஷன் ஆகுது, பிபி ஏறுது” என நகைச்சுவையாக பேசியிருந்தார்.

ரஜினிகாந்த் பேசியதை தொடர்ந்து 2024ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு போட்டியிலும் புதுப்புது சாதனைகளை படைத்து வெற்றியை ருசித்து வருகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட போது, அவர்களுக்கு எதிராக 277 ரன்களை இலக்காக வைத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதுவே IPL வரலாற்றில் அதிகமான ஸ்கோர் என சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தன. இதன்மூலம் ஏற்கனவே இருந்த தங்களுடைய டோட்டல் ஸ்கோர் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. மேலும் IPL பாயிண்ட்ஸ் டேபிளில் டாப் 4ல் இடம்பிடித்துள்ளது.

ரஜினிகாந்தின் பேச்சை தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இப்படி ஆடி வருகிறதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
125562954
சினிமாபொழுதுபோக்கு

தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நிவேதா பெத்துராஜ்: ‘கார் பிரச்சாரம்’ எனக் கூறி நெட்டிசன்கள் ட்ரோல்!

தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...