சினிமாசெய்திகள்

கலாநிதி மாறன் மகள் காவ்யாவை பார்க்கும் போது BP ஏறுது.. ரஜினி சொன்ன வார்த்தை! வெளுத்து வாங்கிய சம்பவம்

23 6589197dc5a99
Share

கலாநிதி மாறன் மகள் காவ்யாவை பார்க்கும் போது BP ஏறுது.. ரஜினி சொன்ன வார்த்தை! வெளுத்து வாங்கிய சம்பவம்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார்.

அதில் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா குறித்தும் பேசினார். IPL போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆவர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போதெல்லாம் இவருடைய எக்ஸ்பிரஷன்ஸ் தான் இணையத்தில் வைரலாகும்.

இதுகுறித்து ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நல்ல வீரர்களை போடுங்க. போட்டி நடக்கும்போதெல்லாம் காவ்யாவின் எக்ஸ்பிரஷன்ஸ் பார்த்தா நமக்கே டென்ஷன் ஆகுது, பிபி ஏறுது” என நகைச்சுவையாக பேசியிருந்தார்.

ரஜினிகாந்த் பேசியதை தொடர்ந்து 2024ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு போட்டியிலும் புதுப்புது சாதனைகளை படைத்து வெற்றியை ருசித்து வருகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட போது, அவர்களுக்கு எதிராக 277 ரன்களை இலக்காக வைத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதுவே IPL வரலாற்றில் அதிகமான ஸ்கோர் என சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தன. இதன்மூலம் ஏற்கனவே இருந்த தங்களுடைய டோட்டல் ஸ்கோர் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. மேலும் IPL பாயிண்ட்ஸ் டேபிளில் டாப் 4ல் இடம்பிடித்துள்ளது.

ரஜினிகாந்தின் பேச்சை தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இப்படி ஆடி வருகிறதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...