24 661fa56d53908
சினிமாசெய்திகள்

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா

Share

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் தான் தலைவர் 171. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்ததாம்.

தலைவர் 171 படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் படம் ஜெயிலர் என கூறப்படுகிறது. ஜெயிலர் 2 குறித்து தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு பின் அவர் நடிக்கப்போகும் படம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியுள்ளார்.

அதன்படி, இப்படத்தை ஐசரி கே கணேஷ் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வெளிவரவில்லை. இந்த நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் கடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் ஐசரி கே கணேஷ் சார் என்னை தயாராக இருக்க சொன்னார்.

ரஜினி அல்லது கமலிடம் நாம் இணைந்து படம் பண்ணுவோம் அதற்காக தயாராக இருங்க என கூறியதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐசரி கே கணேஷை தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவும், ரஜினியின் கால்ஷீட்காக காத்திருக்கிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...